agatiyar

agatiyar
agatiyar

Monday, May 19, 2014

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி:

ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்:

Saturday, May 17, 2014

http://www.youtube.com/watch?v=SWN9Wk1lo7M

Wednesday, April 2, 2014

கல்லாரில் சித்தர்கள் பூசை!!!

கல்லாரில் சித்தர்கள் பூசை!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்திரை மாதம் என்பது சித்தர்கள் அருள் தரும் மாதம் என குறிப்பிடுவார்கள். அந்த சித்திரை மாத பௌர்ணமி அன்று (15/04/2014), சித்தர்களுக்கு சிறப்பு பூசை செய்வதற்காக "கல்லார் அகத்தியர் ஞான பீடத்தில்" ஏற்பாடு செய்து வருகிறார், திரு தங்கராசன் சுவாமிகள். அவரின் அழைப்பிதழ் கீழே தருகிறேன்.

அனைவரும் சென்று கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெற்று வாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

My Dear Daughter/Son,

Chithrai month in Tamil Calendar is consider as Siddargal month.

In this connection Siddargal Vizha (function) சித்தர்கள் விழா will be celebrated at Sree Agathiar Gnana Peedam, Kallar on Chitra Pournami (Full Moon Day) i.e.15.04.2014.

A special pooja will be conducted for Siddargal.

All are invited to attend pooja and get the blessings of Siddhas.

Sree Agathiar Gnana Peedam,
2/464-E, Agathiar Nagar,
Kallaru, Thooripalam,
Mettupalayam, Coimbatore,
Tamil Nadu, India.
Pin-641305.
Mobile:9842027383 , 9842550987

thanks to: http://siththanarul.blogspot.in/2014/03/blog-post_31.html

Sunday, May 26, 2013


அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், பஞ்சேஷ்டி

  • இறைவன் - அருள்மிகு அகத்தீஸ்வரர்
  • இறைவி - அருள்மிகு ஆனந்தவல்லி
  • தீர்த்தம் - அகத்திய தீர்த்தம்
  • ஸ்தலம் - பஞ்சேஷ்டி (பஞ்ச - ஐந்து, இஷ்டி - யாகம்)
  • ஸ்தல விருட்சம் - வில்வம்
  • இதர மூர்த்திகள் - சித்தி விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், இஷ்ட லிங்கேஸ்வரர், பைரவர், அகத்தியர்

Pancheshti Temple

கோயிலுக்கு செல்லும் வழி

சென்னையிலிருந்து வடமேற்கில் சுமார் 28 கீ.மீ தொலைவில் கொல்கத்தா நெடுஞ்சாலையில் (G.N.T Road) பஞ்சேஷ்டி பேருந்து நிலையம் உள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில் 200 மீட்டர் தொலைவில் தெற்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கூடிய "பஞ்சேஷ்டி" திருக்கோயில் அமைந்துள்ளது.
பஸ் ரூட் - கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் காரணோடை வழியாக 112, 112, 112A, 112B, 131, 131A, 131B, 132, 133M, 90, 58C, S, L, V, S
பஸ் நிறுத்தும் இடம் - பஞ்சேஷ்டி

வழிபாட்டு நேரம்

காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, சிறப்பு நாட்களில் கூடுதல் நேரம் வழிபாடு நடைபெறும்.

ஆலயம்

அகத்தீஸ்வரர்
இத்திருக்கோயிலின் மூலவருக்கு அகத்தீஸ்வரர் என்று பெயர். இச்சிவலிங்கம் ஓர் சுயம்பு லிங்கம். அகத்தியர் இத்தலத்திற்கு வரும் முன்பு இச்சிவலிங்கம் இங்கு அமைந்திருந்தது. எனினும் அகத்தியர் வழிபட்டதால், அகத்தீஸ்வரர் என்று பெயர் பெற்றது. அகத்திய முனிவர் இச்சிவலிங்கத்தின் இடது பாகத்தில் அம்பாள் மனோன்மணி சக்தியை அரூபமான தோற்றத்தில் வைத்து, சிவசக்தி ரூபமாக பூஜித்துள்ளார்.
அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார்.
ஆனந்தவல்லி அம்பாள்
அம்பாள் ஆனந்தவல்லி தாயார் முக்கண் நாயகி உருவத்திலேயே மூன்று கண்களை கொண்ட அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு நோக்கி தரிசனம் தருகிறார். ஆனந்தவல்லி அம்பாளின் திருமேனி பச்சை மரகதத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இடது பாதம் முன் வைத்த தோற்றமாகக் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
பொதுவாக வலது காலை முன்வைத்து வா என்று அழைப்பதே வழக்கம். ஆனால், ஆனந்தவல்லி அம்பாள், அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது யாகங்களுக்கு இடையூறு செய்ய வந்த அசுர சக்திகளை அழிக்க, தன் இடது பாதத்தை முன்வைத்து, மூன்று கண்களைக் கொண்டு அசுர சக்திகளையும், தீய சக்திகளையும் அழித்ததால் இங்கு சத்ரூ சம்ஹார கோலத்தில் காட்சி தருகிறார். தீய சக்திகளை அழிக்கும் பொருட்டு அம்பாள் தன்னுடைய இடது பாதத்தை முன்வைத்துச் சென்ற கோலத்தில் காட்சி தருகிறார். எனவே, இத்தலத்து அன்னை சத்ருசம்ஹாரியாக திகழ்கிறாள். இச்சத்ருசம்ஹாரியை வழிபாடு செய்தால் தீய சக்திகளின் தொல்லைகள் இருக்காது. செயல்களில் தடங்கல்கள் இருக்காது.
சத்ருசம்ஹாரியாக உக்கிரமாகத் திகழ்ந்த அன்னையைக் குளிர்விக்க அன்னைக்கு முன் மிகப்பெரிய மஹாஎந்திரத்தை (துர்கா எந்திரம்) அகத்திய முனிவரே பிரதிஷ்டை செய்து அம்பாளை சாந்தப்படுத்தியுள்ளார். இந்த யந்திரத்தை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
Pancheshti Moolavar
இஷ்ட லிங்கேஸ்வரர் மகிமை இந்த ஆலயத்தின் வடக்கு மூலையில் அகத்திய முனிவரின் சீடரான புலத்திய முனிவர் இஷ்ட லிங்கம் என்ற சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார். இந்த இஷ்ட லிங்கத்தை நாம் வழிபாடு செய்தால் நம்முடைய விருப்பங்கள் நிறைவேறுவதுடன், அமைதியான வாழ்வு, மனச்சாந்தி கிட்டும் என்பது இங்கு வரும் பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாகும்.
Pancheshti Ishtalingeswarar

பிற தெய்வங்கள்
இறைவன் இறைவியைத் தவிர, பஞ்சேஷ்டி தெய்வங்களாக விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை பைரவர் ஆகியோரின் சன்னதிகளும் அமைந்துள்ளன. சித்தி விநாயகர் சன்னதி, பாலமுருகன் சன்னதி (முருகனின் சிருஷ்டி கோலம் - அக்ஷமாலை, கிண்டிகையுடன் பிரம்மாவின் சிருஷ்டி தொழிலை பிரம்மாவிடமிருந்து பறித்து தானே மேற்கொள்ளும் தோற்றம்), சண்டிகேஸ்வரர் சன்னதி, இஷ்ட லிங்கேஸ்வரர் சன்னதி, நவக்கிரக சன்னதி மற்றும் அகத்திய முனிவரின் சன்னதி ஆகியவை பிரதான ஆலயத்தை சுற்றி அமைந்துள்ளன.
ஆலயத்தின் வடமேற்குப் பகுதியில் பெரிய புற்று அமைந்துள்ளது. அப்புற்றினுள் இன்றளவும் நாகம் ஒன்று வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Pancheshti Murugar  Pancheshti Putru
பைரவர்
இஷ்டலிங்கேஸ்வரருக்கு கிழக்கில், ஈசான்ய திசையில் பைரவருக்குத் தனிச் சன்னதி அமைந்துள்ளது,
Pancheshti Bairavar

அகத்திய தீர்த்த மகிமை

கோவிலின் கிழக்குப் பகுதியில் அகத்திய தீர்த்தம் பரந்து விரிந்து காணப்படுகிறது. அகத்திய முனிவர் கூறியபடி சுகேதுவும் அவனது குடும்பத்தினரும் இத்தீர்த்தத்தில் மூழ்கி, சிவனை வழிபட்டு, யாகம் வளர்த்து சாப விமோசனம் பெற்றனர். இன்றும், இத்தீர்த்தத்தில் மூழ்கி, கோவிலை வலம் வந்து, அங்கப் பிரதட்சணம், அடிபிரதட்சணம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத நோய்களும் தீர்வதாக ஐதீகம்.
Pancheshti Agathiar

இராஜ கோபுரம்

இந்த ஆலயத்தின் அம்பாள் தான் பிரதானம். இராஜகோபுரமே அம்பாளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுர நுழைவாயில் சிற்பத்தில் அம்பாளை நோக்கியவாறு நவக்கிரகங்கள் ஒரே நேராக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் சனீஸ்வர பகவான் கழுகு வாகனத்துடன் காட்சியளிக்கிறார். இவ்வாறு அம்பாளின் பார்வையில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளதால் அம்பாள் ஆனந்தவல்லியை வழிபாடு செய்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அஷ்டதிக் பாலகர்கள் (திசை தெய்வங்கள்) ஒரே நேராக அம்பாளை நோக்கி அமைந்துள்ளது. அம்பாளுக்கு முன்னேயுள்ள மஹா எந்திரத்தின் அதிதேவதைகளின் சிற்பங்களின் வடிவம் இராஜ கோபுர நுழைவாயில் மேல் முகப்பில் அமைந்துள்ளது.

தோஷ நிவர்த்தி மகிமைகள்

ஒரு ஆலயத்தின் இராஜகோபுரம் தெற்கில் அமைந்திருந்தால் அது பரிகாரத் தலமாகவே கருதப்படுகிறது. இக்கோயிலிலும், இராஜகோபுரம் அம்பாளுக்காக தெற்க்கில் அமைந்துள்ளது. எனவே பஞ்சேஷ்டி ஆலயமும் பரிகாரத்தலம் என்பது அனைவருக்கும் விளங்கும்.
இத்திருக்கோயிலில் பக்தர்கள் எவ்வித பரிகாரம் செய்தாலும், அவற்றின் தொடக்கமாக கருவறைக் கூடத்தில் அகண்ட தீபம் மற்றும் விளக்குகள் ஏற்றி வைத்த பின்பே மற்ற பரிகாரங்களை செய்தல் வேண்டும்.
இழந்த சொத்து மீண்டும் கிடைக்க:
அகத்திய முனிவரால் செய்யப்பட்ட ஐந்து யாகத்தில் அன்னதானத்தையே ஒரு யாகமாகச் செய்துள்ளார். அதனால், இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் நமக்குக் கிடைப்பதாகவும், உயர் பதவிகள் தேடி வரக்கூடும் என்றும், பிறவிப் பயனை அடைவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அகத்திய முனிவரே ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்து சென்றுள்ளார். அந்த உண்மைத் தன்மையை அகத்தியர் ஆசிரமங்கள் மூலமாக கேட்டறிந்து இன்றளவும் பலர் திருத்தலத்தில் அன்னதானம் செய்கின்றனர். இது ஒரு அன்னதானத் தலமாக அமைந்துள்ளது.
திருமணத்தடை நீங்க:
அம்பாளுக்கு முன் மிகப்பெரிய மஹா எந்திரத்தை (துர்கா எந்திரம்) அகத்திய முனிவரே பிரதிஷ்டை செய்து அம்பாளை சாந்தப்படுத்தியுள்ளார். இந்த மஹா எந்திரத்தில் ராகு கால நேரத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகங்கள் செய்து, எலுமிச்சம்பழ விளக்குகளை இந்த எந்திரத்தை சுற்றிலும் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் திருமணத் தடைகள் விலகுவதாகவும், சத்ருக்களின் தொல்லைகள் நீங்குவதாகவும் ஐதீகம்.
நவக்கிரக தோஷம் நீங்க:
இந்த ஆலயத்தின் அம்பாள் தான் பிரதானம். இராஜகோபுரமே அம்பாளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுர நுழைவாயில் சிற்பத்தில் அம்பாளை நோக்கியவாறு நவக்கிரகங்கள் ஒரே நேராக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் சனீஸ்வர பகவான் கழுகு வாகனத்துடன் காட்சியளிக்கிறார். இவ்வாறு அம்பாளின் பார்வையில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளதால் அம்பாள் ஆனந்தவல்லியை வழிபாடு செய்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
வாஸ்து தோஷம் நீங்க:
அஷ்டதிக் பாலகர்கள் (திசை தெய்வங்கள்) ஒரே நேராக அம்பாளை நோக்கி அமைந்துள்ளது. அம்பாளுக்கு முன்னேயுள்ள மஹா எந்திரத்தின் அதிதேவதைகளின் சிற்பங்களின் வடிவம் இராஜ கோபுர நுழைவாயில் மேல் முகப்பில் அமைந்துள்ளது. அம்மனையும் மஹாயந்திரத்தையும் வழிபட்டவர்களின் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
சத்ருதோஷம் நீங்க:
இராஜகோபுரம் அம்பாளுக்காக அமைந்து இருப்பதாலும் அம்பாள் சத்ருசம்ஹாரியாக இருப்பதாலும் இந்த ஆலயமே சத்ருதோஷ பரிகாரத்தலமாக அமைந்துள்ளது.
விரும்பியன கிடைக்க:
இந்த ஆலயத்தின் வடக்கு மூலையில் அகத்திய முனிவரின் சீடரான புலத்திய முனிவர் இஷ்டலிங்கம் என்ற சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார். இந்த இஷ்ட லிங்கத்தை நாம் வழிபாடு செய்தால் நம்முடைய விருப்பங்கள் நிறைவேறுவதாகவும், மனச்சாந்தி கிடைப்பதாகவும், வழக்கு விவகாரங்கள் தீர்வதாகவும் ஐதீகம்.

பஞ்சேஷ்டி என்னும் திருத்தலம்

பஞ்சேஷ்டி திருத்தலம் அரும்பெரும் ஆன்மிகத் திருத்தலமாக விளங்குகிறது. ஒருமுறை மாமுனிவர்களான வசிஷ்டர், கௌதமர், கன்வர் ஆகியோர் பூமியில் தாங்கள் தவம் செய்வதற்கு ஏற்ற இடத்தை கூறியருள வேண்டும் என்று சக்கரம் ஒன்றை செய்து அதை உருளச் செய்தார். அத்தர்ப்பைப் புல் சக்கரமானது உருண்டோடி வந்து ஓரிடத்தில் நின்றது. அவ்விடத்தில் தவம் செய்யும்படி முனிவர்களிடம் கூறினார் பிரம்மா. பிரம்மா காட்டிய அந்த இடமே பஞ்சேஷ்டி திருத்தலமாகும்.
கோடை காலத்தில் இத்திருத்தலத்தைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும், இவ்வூரில் மட்டும் பூமியின் மேற்பரப்பிலேயே சுவையான நீர் கிடைக்கும். இந்த அதிசயம் இன்றளவும் நாம் காணும் உண்மையாகும். எனவே, இத்தலம் "பஞ்சம் தீர்க்கும் பஞ்சேஷ்டி" என்று அழைக்கப்படுகிறது. இனி, இத்தலத்திற்கு பஞ்சேஷ்டி என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்று பார்ப்போம்.
பஞ்சம் - ஐந்து, இஷ்டி - யாகம், அதாவது அகத்திய முனிவரால் ஐந்து யாகங்கள் நடத்தப்பெற்ற திருத்தலம் என்பதால் இத்தலம் பஞ்சேஷ்டி என்று பெயர் பெற்றது. அகத்திய முனிவர் ஐந்து யாகங்கள் நடத்த வேண்டிய காரணம் தான் என்ன?
ஒருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமான் அங்கிருந்தோருக்கு சிவ தத்துவத்தை போதித்து கொண்டிருந்தார். அவ்வேளையில் சிவபெருமானின் அருகில் பார்வதி தேவியும் அமர்ந்திருந்தார். அப்போது அங்கிருந்த சுகேது என்ற யட்சன் சிவபெருமானிடம், "பெருமானே! பார்வதி தேவியையும் அருகில் வைத்துக் கொண்டு சிவ தத்துவத்தை எங்களுக்கு விளக்கிக் கூறுவது சரிதானா?" என்று கேட்டான். சிவபெருமான் புன்னகைத்தார். ஆனால் அருகில் இருந்த முருகப் பெருமானுக்கோ கோபம் வந்தது. சிவனும், சக்தியும் ஒருவரில் ஒருவர் பதியென்று அறிந்த பின்னும் இக்கேள்வியை கேட்ட சுகேதுவை அசுரனாகப் பிறக்கும்படி சபித்தார் முருகப் பெருமான்.
சுகேது அசுரனாகப் பிறந்தான். அசுரப் பெண்ணொருத்தியை மணந்து மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தான். அம்மூன்று குழந்தைகளும் தங்கள் தந்தைக்கு நேர்ந்த சாபம் பற்றி அறிந்தனர். அவர்கள் பராசக்தியை நோக்கி தவம் புரிந்து, அளப்பர்கறிய ஆற்றல்களை பெற்றனர். தாங்கள் பெற்ற அரிய ஆற்றல்களைக் கொண்டு தேவர்களை வென்றதோடு, அவர்களை அடிக்கடி துன்புறுத்தியும் வந்தனர்.
சுகேதுவின் புதல்வர்களால் துன்பத்திற்குள்ளான தேவர்கள் இது பற்றி அகத்திய முனிவரிடம் முறையிட்டனர். அகத்திய முனிவர் சிவபெருமானைத் துதித்தார். சிவபெருமான் ரிஷபாரூடராக பார்வதி தேவி, விநாயகப் பெருமான், முருகப் பெருமான், நந்தி தேவர் ஆகியோருடன் அகத்தியரின் முன்பு எழுந்தருளி அகத்தியருக்குத் தேவையான ஆற்றலை அருளினார்.
இந்நிலையில் அசுரன் சுகேது மகிஷாசுரண்யம் என்ற வனத்தில் இருந்த மத்தன், உன்மத்தன், பிரமதத்தன் என்னும் ராட்சதர்களுடன் போரிட்டுத் தோற்று கடலுக்கு அடியில் சென்று மறைந்தான். அவனது மூன்று புதல்வர்களும் தங்கள் தந்தையை தேடி கடலை கலக்கினர். இதனால், கடல்வாழ் உயிரினங்கள் அஞ்சி நடுங்கின. உலகில் பிரளயம் ஏற்பட்டு உயிர்கள் துன்பம் அடைந்தன.
அவ்வேளையில் அகத்திய முனிவர் தனது ஆற்றலால் கடல் நீர் முழுவதையும் பானகம் போல் குடித்துவிட்டார். கடல் நீர் முழுவதும் காணாமல் போய் நிலமெல்லாம் வறண்டது.
இதனையறிந்த தேவர்கள் மீண்டும் கடலை உருவாக்கும்படி வேண்டினர். அகத்தியர் பஞ்சேஷ்டி திருத்தலத்தில் சிறிது நீரை உமிழ்ந்த பின், மீதி நீரை முன்பு கடல் இருந்த இடத்திலேயே உமிழ்ந்தார். பஞ்சேஷ்டியில் அகத்தியர் உமிழ்ந்த சிறிது நீரே இன்று திருக்குளமாகத் திகழ்கிறது. "அகத்திய உமிழ்நீர் தீர்த்தம்" என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
அகத்திய முனிவர் வைகாசி பௌர்ணமி தினத்தில் இத்திருக்குளத்தை உருவாக்கியதால், ஒவ்வொரு ஆண்டும், வைகாசி பௌர்ணமி நாளில் கங்கை நதியே இத்தீர்த்தத்தில் கலப்பதாக ஐதீகம்.

இந்திரன் - விஸ்வருபன் சாபம் நீங்கிய தலம்

ஒருமுறை தேவர்களின் தலைவனான இந்திரன் யாகம் ஒன்று நடத்த விரும்பினான். தேவகுருவான பிரகஸ்பதியோ அவ்வேளையில் தவத்தில் ஈடுபட்டிருந்தார். எனவே விஸ்வருபன் என்பவரை தனது குருவாக ஏற்று யாகத்தை நடத்திவிட்டான்.
இதனால் கோபமடைந்த பிரகஸ்பதி, இந்திரனையும் விஸ்வரூபனையும் மானிடப் பிறவி எடுக்கும்படி சபித்தார். அவர்கள் இருவரும் மித்ரத்வஜ மன்னனின் புதல்வர்களாக, சந்திரமௌலிப்ரியன் மற்றும் சாம்புப்ரியன் என்னும் பெயரில் பிறந்தனர்.
அதுபோல, குபேரனின் மகளான பத்மினி என்பவள் உரோம மகரிஷியை பரிகசித்ததால் அம்முனிவரின் சாபத்திற்கு உள்ளானாள். அதாவது, பத்மினி விருத்தாசலத்தை ஆண்டு வந்த பாவபானு என்ற மன்னனுக்கு அம்பிகை என்ற பெயரில் மகளாகப் பிறந்தாள்.
அம்பிகை திருமண வயதை எட்டியதும் பாவபானு மன்னன் அவளுக்கு சுயம்வரம் நடத்தினான். சம்பாசுரன் என்னும் அசுரனும் மானிட உருவெடுத்து சுயம்வரத்தில் கலந்து கொண்டதோடு, அம்பிகையையும் தூக்கிச் சென்றான். இதனையறிந்த, சுயம்வரத்திற்கு வந்திருந்த சந்திரமௌலிப்ரியன் மற்றும் சாம்புப்ரியன் சம்பாசுரனை துரத்திச் சென்று போரிட்டு வென்றனர். அம்பிகையை இருவருமே திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் தக்க சமயம் பார்த்து சம்பாசுரன் மீண்டும் அம்பிகையை தூக்கிச் சென்றுவிட்டான். அம்பிகையை காணாமல் தவித்த சந்திரமௌலிப்ரியனும் சாம்புப்ரியனும் பல இடங்களிலும் தேடி இறுதியில் காளஹஸ்தி வந்தடைந்தனர்.
அப்போது காளஹஸ்தியின் தென்கிழக்கில் தவம் செய்யும் அகத்திய முனிவரின் குரலைக் கேட்டனர். அகத்திய முனிவர் தங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருவரும் அவ்விடத்திற்கு வந்தனர். அவ்விடம் பஞ்சேஷ்டி ஆகும். பஞ்சேஷ்டிக்கு வந்த சந்திரமௌலிப்ரியனும் சாம்புப்ரியனும் அகத்தியரின் பாதங்களை வணங்கி, நடந்தவற்றை கூறினர். அகத்திய முனிவரும் அவ்விடத்தில் ஓர் ஆசிரமம் அமைத்து பிரதோஷ பூஜையை செய்யும்படி கூறினார்.
ஒருநாள் பிரதோஷ பூஜையை முடித்த இருவரும் ஆசிரமம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண்ணின் அபயக்குரல் கேட்க, அவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அங்கே சக்திஉபாசகன் என்னும் அசுரன் அம்பிகையை காளி தேவிக்குப் பலி கொடுக்கவிருந்தான். அவன் ஏற்கனவே சம்பாசுரனிடமிருந்து அம்பிகையை தூக்கி வந்திருந்தான். சந்திரமௌலிப்ரியனும் சாம்புப்ரியனும் அவனுடன் போரிட்டு அவனை கொன்று அம்பிகையை மீட்டு வந்தனர். இறுதியில் அகத்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி அம்மூவரும் சாப விமோசனம் பெற்று விண்ணுலகை அடைந்தனர்.
இவ்வாறு பஞ்சேஷ்டி திருத்தலம் புராண காலந்தொட்டே விண்ணுலகோர்க்கும், மண்ணுலகோர்க்கும் நற்கதி வழங்கிய புண்ணியத் தலமாகத் திகழ்கிறது.

சிறப்பு நாட்கள்

பிரதோஷம்
பிரதோஷ வழிபாட்டின் மகிமையை சிவபெருமான் உலகிற்குத் தெரியப்படுத்திய தலம் என்ற சிறப்பு பஞ்சேஷ்டிக்கு உண்டு. வங்கக் கடலின் அருகே அமைந்துள்ள முக்கிய சிவத்தலங்களில் பிரதோஷ பூஜைக்கு பிரசித்தி பெற்ற சிவத்தலம் பஞ்சேஷ்டி. இந்திரன், இந்திராணி, விஸ்வரூபன் போன்ற தேவர்கள் அகத்திய முனிவருடன் பஞ்சேஷ்டியில் தங்கியிருந்து பிரதோஷ பூஜைகள் செய்து, பிரதோஷ விரதத்தைக் கடைப்பிடித்ததால் அகத்திய முனிவர் மூலம் அவர்களுக்கு சாப விமோசனம் கிட்டியது.
கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்
இத்திருத்தலத்தில் ஒவ்வோராண்டும் கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் யாகம் வளர்த்து சுயம்பு லிங்கமான அகஸ்தீஸ்வரருக்கு மகா அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் யாக பூஜை, சிறப்பு அலங்காரம், அபிஷேகங்களைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அன்று இந்தப் பூஜையில் கலந்து கொண்டு, அகத்தீஸ்வரரை மனமுருக வேண்டுபவர்களுக்கு நோயற்ற வாழ்வு, மன நிம்மதி, வாழ்வில் சகல நன்மைகள், சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருக்கல்யாணம்:
இத்தலத்தில் வைகாசி பௌர்ணமி அன்று நடைபெறும் திருக்கல்யாணம் மிகச் சிறப்பானது. அன்று அகத்தியர் இத்திருத்தலத்திற்கு நேரில் வந்து இறைவனின் திருமணத்தை காண்பதாக ஐதீகம். அன்று திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு வணங்கும் பக்தர்களை ஆத்மார்த்தமாக வருகை தரும் அகத்தியர் பெருமான் வாழ்த்தி, அனுக்கிரகம் செய்வதாக ஐதீகம்.
இத்திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ளும் திருமணம் ஆகாதவர்களுக்கு அவர்களது தோஷங்கள் நீங்கி திருமணம் கைகூடுகிறது. திருமணம் ஆனவர்களுக்கு ஆசீர்வாதம் கிட்டுகிறது. எனவே பக்தர்கள் பெருமளவில் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்கின்றனர்.
தொடர்புக்கு
நிர்வாக அலுவலர்
து. வள்ளுவன். B.A.
ஸ்தானீகம் & அர்ச்சகர்கள்
  1. P.N. ராஜாமணி குருக்கள் - தொ. பே. 9444220780
  2. P.N. மோகன் குருக்கள் - தொ. பே. 9444146752
  3. P.N. பாபு குருக்கள் - தொ. பே. 9841317500
  4. P.N. கணேஷ் குருக்கள் - தொ. பே. 9841344867
  5. P.N. கந்தன் குருக்கள் - தொ. பே. 9962570445

அகத்தியர் ( பொதிகை) மலைக்கு ஒரு பயணம்

குறுமுனிக்கு பூசை

அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர். 

தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர்.

அகத்தியர் வாழும் இப்பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் சாகசப் பயணம் என்றும் கூறலாம்.

அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை.

இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.
தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் (எமஐஈஉ) மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

முதல் அரைமணிநேரப் பயணத்தில் நாம் முதலில் காண்பது விநாயகர் கோயிலை. அவரை வணங்கி நடைப்பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் கரமனையாறு அடைகிறோம். அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

 பனிபடர்ந்த அகத்தியர் மலை

இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து, சுமார் 6 மணி நேர பயணத்தில் (நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம்.
அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம். குறுமுனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை வணங்கிவிட்டு நடைப்பயணம் தொடங்குகிறது.

சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு (இது முற்றிலும் மூலிகை நீரைக் கொண்டது) மீண்டும் நடைப்பயணம். 15 நிமிட நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம்.

இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறை' என்று கூறுகின்றனர். கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரவருணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.

 கயிற்றின் துணையுடன்

இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப்பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. இச்சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருள்படுத்தாது, காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு (ரோப்) பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.

அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும்.

இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்படும்.

 

இப்படி ஆனந்த அனுபவத்துடன், கொண்டு சென்ற பூஜைப் பொருள்களால், குறு முனிவருக்கு அபிஷேக, ஆராதனை செய்து, கூட்டு வழிபாடு நடைபெறும். 
 

 



http://farm8.staticflickr.com/7215/7398003992_37369c6376_m.jpg 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWMz1ZPCXHwYLEke-Sx8HVE91k24zef079TjabRCN7mQ4fo21eG09WVWy8Hgl_YIENmuUSSQ8HcFBjUYmVeyjRb7Efr-Q6UrA5sGTadaVffPypNobhyphenhyphenwkH9_DMCtYXtN34JJDlYNs3Uds/s270/Pothigai-Agathiyar-Perumaan_small.jpg

தொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடைந்து அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். அதன் பின் இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 5 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.

இம் மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகது.

தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர்.


1998-ம் ஆண்டு தமிழக வனத் துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக் குழுவினர் மற்றும் பக்தர்களின் முயற்சியால், வனத் துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது.

இந்நிலையில், 2009-ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல அனுமதி மறுத்ததுடன், கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது.

ஓம் அகத்தீசாய நமஹ 

From : dinamani.com
அகத்தியர் தனிகோவில் கொண்டுள்ள அம்பை திருக்கோவில்




சிவபெருமான் கயிலையங்கிரியில் உமாதேவியை மணந்த போது, அனைத்து தேவர்களும் அங்கு கூடி நிற்க கயிலை தாழ்ந்து தென்னாடு உயர்ந்தது. அதனை சமப்படுத்த இறைவன் அகத்தியரை தென் னாட்டிற்கு அனுப்பி வைத்த கதை நாம் அறிந்ததே!

தென்னாட்டிற்கு உமையம்மையுடன் வந்து தன் திருமணக் காட்சியை அகத்தியருக்கு அருளுவதாகவும் கூறினார் சிவபெருமான். அதன்படி அகத்தியரும் தென்னாட்டிற்கு வந்து பல தலங்களைத் தரிசித்து, கடைசியில் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் பொதிகை மலையில் வந்து தங்கித் தவம் செய்தார் என்று கந்த புராணம் கூறுகிறது. பாபநாசம் உட்பட பல தலங்களில் இறைவன் திருமணக் காட்சி அருளியுள்ளார். இப்பொழுதும் அகத்தியர் பொதிகை மலையில் தவம் செய்து கொண்டிருப்பதாக ஒரு ஐதீகம் உள்ளது.

பொதிகை மலை இருக்கும் பகுதியான அம்பாசமுத்திரமும் அதனைச் சுற்றியுள்ள பல இடங்களும் முத்தமிழிலும் புலமை பெற்ற தமிழ் முனிவர் அகத்தியருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும். இவர் பல திருக்கோவில் களில் சிவபெருமானை லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம் உண்டு. இதற்குச் சான்றாக தமிழகத்தில்- குறிப்பாகத் தென் மாவட்டங்களில் உள்ள பழமை வாய்ந்த கற்றளி (கருங்கல் கோவில்) சிவாலயங்களில் அகத்தியரின் திருவுருவச் சிலைகளை நாம் காணலாம். அகத்தியர் தனியாக அல்லது சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவதாக வடிக்கப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் தூண்களில் வடிக்கப்பட்டிருக்கும். இதிலிருந்து அகத்தியருக்கும் தமிழ் நாட்டிற்கும் ஏற்பட்ட தொன்மைத் தொடர்பை நாம் அறியலாம்.

இமயமலையிலிருந்து அகத்தியர் பாண்டி நாட்டுக்கு வந்து பாண்டிய மன்னர்களுக்கு குலகுருவாக விளங்கினார் என்ற செய்தி, கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் ராசசிம்ம பாண்டியன் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட சின்னமனூர் செப்பேடுகளில்- வடமொழிப் பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காளிதாசர் எழுதிய ரகுவம்சத்திலும் "அகத்தியரின் சிஷ்யன் பாண்டியன்' என்னும் குறிப்பு உள்ளது. இவற்றால் அகத்தியருக்கும் பாண்டிய ருக்குமுள்ள தொடர்பும் நமக்கு நன்கு புலனாகிறது.

இத்தனை பெருமை வாய்ந்த அகத்தியருக்கு அவரது மனைவி லோபமுத்திரையுடன் ஒரு கோவில் அம்பாசமுத்திரம் பிரதான கடை வீதியில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த சந்நிதியில் அகத்தியப் பெருமான் காட்சி தருகிறார். தனிச் சந்நிதியில் லோபமுத்திரை தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். ஆலய முகப்பில் நந்தி, கொடி மரம் ஆகியவை உள்ளன. கருவறையின் வலப்புறம் இருவரின் அழகிய வண்ண ஓவியங்கள் உள்ளன. தென்புறம் தனிச் சந்நிதியில் தட்சிணாமூர்த்தியும், மேற்கே அகத்தியர், லோபமுத்திரையின் அழகிய பெரிய உற்சவத் திரு வுருவங்களும் செப்புப் படிமத்தில் காட்சியளிக்கின்றன.

அடுத்து நடராஜர்- சிவகாமியின் அழகிய பெரிய செப்புப் படிமங்களும் உள்ளன. கன்னி மூலை விநாயகரும் உள்ளார். கிழக்கே உள்ள பெரிய வெளி மண்டபத்தின் முன்புறம் அகத்தியரின் சுதை உருவம் உள்ளது. இவருக்கும் சிறப்பு வழிபாடுகள் உள்ளன. அகத்தியருக்கென்று ஏற்பட்ட ஒரே கோவில் என்ற பெருமை உடையது இந்தக் கோவில்.

கருவறையில் அகத்தியர் வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கையில் ஏடு ஏந்தியுள்ளார். கழுத்தில் லிங்கத்துடன் மாலை, ஜடாமகுடம், மார்பில் பூணூல், மீசை, தாடியும் அமைந்துள்ளது. அகத்தியரின் தேவி லோபமுத்திரை இரு கரங்களுடன் வலக்கரத்தில் மலர் ஏந்தியுள்ளார். அகத்தியர் தென் தமிழ் நாட்டுக்கு வரும்போதே மணம் புரிந்து கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு சித்தர் என்னும் பெயர் கொண்ட மெய்யறிவு வாய்ந்த புலவர் பிறந்த தாகவும் கூறுவர்.

இந்த அகத்தியர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்னம் படைத்தல் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள், அவரவர் வீடுகளிலிருந்து சோறு பொங்கி எடுத்து வந்து கோவிலில் உள்ள ஒரு அறையில் அதைக் குவித்து வைத்து மூடிவிடுகின்றனர். மறுநாள் காலை அந்த அறையைத் திறந்து பார்த்தால் உணவுக் குவியலில் காலடித் தடம் காணப்படுகிறது. தனக்குப் படைத்த உணவை அகத்தியரே இங்கு வந்து ஏற்றுக் கொள்வதாக ஐதீகம் உள்ளது. பின்னர் இந்தப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கைக்கோள முதலியார் இன மக்கள் இவரை தெய்வமாக வழிபடு கின்றனர்.

திருநெல்வேலியிலிருந்து அம்பாச முத்திரம் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வூரில் காசீசர், அம்மையப்பர், வீரமார்த்தாண்டீஸ்வரர் சிவாலயங்களும்; கிருஷ்ண சுவாமி, புருஷோத்தம பெருமாள் வைணவ ஆலயங்களும் உள்ளன.


நன்றி:  நக்கீரன்.இன்
அகத்தியர் அபிஷேகம்

http://www.youtube.com/watch?v=J3tmYEgQjdY